தந்தை-மகன் உறவுக்கான கிரக அமைப்பு
♈ ஒரு மனிதன் பூமியில் பிறந்து வாழும் காலத்தில், சாதனை மனிதனாக வாழ வேண்டும்.
♈ அதாவது எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும்.
♈ இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. இதைத்தான்
⚜️ திருவள்ளுவர் ⚜️
,🪭 *“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”*🪭
என்று எடுத்துரைக்கிறார்
🟡 தந்தை-மகன் உறவுக்கான கிரக அமைப்பு
🔸ஒருவர் புகழுடன் வாழ வேண்டும் என்றால்,
1, 5, 9 என்னும் பூர்வ ஜென்ம தொடர்புடைய பாவகங்களில்
9 -ம் பாவகம் மிக முக்கியம்.
🔸 தந்தை என்ற 9-ம் பாவகம் இருந்தால் தான்,
🔸 1-ம் பாவகம் என்ற ஜாதகர் ஜனனமாக முடியும் .
⚜️1-ம் பாவகம் என்ற லக்ன பாவகம் சிறப்பாக இருந்தால்தான்
🔸, 9-ம் பாவகம்
என்ற பூர்வ புண்ணிய பலத்தால்,
5-ம் பாவகம் என்ற குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🔸 எனவே ஒரு ஜாதகரை வலிமை பெறச் செய்யும் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ஆகியவற்றில்
🔸 9-ம் பாவகமானது வலிமையுடன் இருக்க வேண்டும்.
♦️ உன்னைப் பெற்ற தந்தை யார்?, ❓
♦️ உன் உடம்பில் உள்ள டி.என்.ஏ.வை யாரிடம் இருந்து நீ பெற்றாய் ?, ❓
♦️ உன் குலம் – கோத்திரம் என்ன?, ❓
♦️ பெற்றவர்கள் செய்த புண்ணிய பலத்தால் நீ பிறந்தாயா? ❓
⚜️ அல்லது ❗
♦️ பெற்றவர்களின் பாவத்தை தீர்க்கப் பிறந்தாயா?, ❓
♦️ உன்னால் உன் தந்தை புகழப்படுவாரா? ❓
⚜️ அல்லது ❗
♦️ உன் தந்தையால் உனக்கு புகழ் கிடைக்கப் போகிறாதா?, ❓
♦️ முன்னோர்களின் சொத்துக்கள் உழைப்பால் வந்ததா? ❓
⚜️ அல்லது❗
♦️ அநீதியாக வந்ததா?,
♦️ நீ முன்னோர்களின் சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவனா?,
♦️ உன் பிறப்பின் நோக்கம் என்ன? ❓
♻️போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தருவதுதான் 9-ம் பாவகம்.
♻️மொத்தத்தத்தில் இந்த ஜென்மத்தில் உனக்கு என்ன கொடுப்பினை உள்ளது.
♻️நீ அனுபவிக்கப் போகும் நல்ல,
தீய வினைப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி இதன் மூலம் அறிய முடியும்.
🟡ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் கருவில் சுமக்கிறாள்.
🟡 தந்தை என்பவரோ, தன் வாரிசுக்கு முன் மாதிரியாக வாழ்பவர் .
🔸அவர்கள் சொல்லும் முன்பாகவே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்.
🔸வாழ்நாள் முழுவதும் பிள்ளையை தன் நெஞ்சில் சுமந்து,
சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக மாற்றும் பொறுப்பு கொண்டவர்.
🔸இது ஒருபுறம் இருக்க பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளைப் போல வாழ்கிறார்கள்.
🔸பல இடங்களில் இன்னும் ஒரு படி மேலே போய்
தந்தையும், மகனும் பேசிக் கொள்வதே கிடையாது.
அல்லது❗
🔹கடும் பகைவர்களாக இருக்கிறார்கள்.
🔹 தந்தை- மகன் உறவை மூன்றாக வகைப்படுத்தலாம் .
🔹இதில் முதலாவது, தந்தையும் மகனும் ஒருமித்த கருத்துடன் வாழ்வது.
🔹இவர்களுடைய ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும்.
🔹இல்லையெனில் 9-ம் இடத்திற்கு லக்ன சுபர்
அல்லது
குருவின் பார்வை இருக்கும்.
🔹தா்ம கா்மாதிபதி யோகம் வரமாக செயல்படும்.
🔹இவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துடன் வாழ்வார்கள்.
🔹தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது
♈ இரண்டாவது வகை.
♦️இவர்களுடைய ஜாதகத்திலும் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும்.
♦️அந்த யோகமானது இவர்களுக்கு சாபமாக செயல்படும்.
♦️ இவா்கள் ஜாதகத்தில் குரு, சனி வக்ரமாகவோ, பலம் இழந்தோ இருக்கும் .
♦️ குரு அல்லது சனிக்கு, செவ்வாய் சம்பந்தம் இருக்கும்.
♦️தந்தை மகன் கருத்துவேறுபாடு
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
மன வருத்தத்தை தரும் விதத்தில் இருப்பது
மூன்றாவது வகையாகும்.
♦️ இதனை தந்தையால் மகனுக்கு பாதிப்பு
♦️ அல்லது❗
☣️மகனால் தந்தைக்கு மன வேததனை என்றும் வகைப்படுத்தலாம்.
☣️ஜனன கால ஜாதகத்தில் கிரக நிலவரம் எப்படி இருந்தாலும்,
தந்தை – மகன் கருத்து ஒற்றுமை என்பது மிக அவசியம்.
♦️ இதற்கு தீர்வு கிடைக்குமா? ❓
♦️ உண்டா? ❓
☣️என்பதே பலரின் ஆதங்கம். இதை ஜாதக ரீதியாக மட்டுமின்றி,
உளவியல் ரீதியாகவும் கொஞ்சம் அணுகவேண்டியதிருக்கிறது.
☣️உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்குமான தீா்வும்,
நம் கையில்தான் இருக்கிறது.
☮️ ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை
☮️, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது,
☮️ சகிப்புத் தன்மை இன்மை
☮️போன்றவை கருத்து வேறுபாட்டிற்கு பிரதான காரணமாக இருக்கின்றன.
☮️நமது ஆழ்மனதில் நிலவும் மனக்குறையும் கூட பல பிரச்சினைக்கு மூலக் காரணமாக உள்ளது.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்.
உதாரணமாக ❗
❇️ யாராவது உங்களை பார்த்து “அப்பா சவுக்கியமா?” ❓
ன்னு கேட்டா, நீங்க என்ன பதில்களை சொல்றீங்க.. ❗
❇️ “ஏதோ இருக்கிறார்”, ❗
❇️ “என்னமோ வண்டி ஓடுது”, ❗
❇️*“ என்னத்த சொல்ல..❗
❇️ எல்லாம் என் தலையெழுத்து”,❗
❇️ “ஏண்டா அவருக்கு பிள்ளையா பிறந்தோம்னு இருக்கு”, ❗
❇️ “எனக்கு மட்டும் நல்ல அப்பாவை தராமல் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு”❗
♦️பலரிடம் இருந்து விரக்தியின் வெளிப்பாடாக இப்படியானவ பதில்கள்தான் பெரும்பாலும் வருகிறது.
♦️இதெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வருகிற வார்த்தைகள்.
♦️இந்த வார்த்தைகள்தான் உங்களோட வாழ்க்கைைய தீர்மானம் பண்ணுகிறது.
ஏனெனில்,
ஒரு வார்த்தைைய பத்து தடவை சொல்லும் போது,
அந்த வார்த்தைக்கு சக்தி கிடைத்து,
அது உடனடியாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
உங்க சொல்படிதான் அனைத்தும் நடக்கும்.
எனவே
⚜️ “நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்”,
⚜️ “கடவுள் எங்களை நல்லபடியா வைத்து இருக்கிறார்”
🔸என்பது போன்ற நேர்மறை வார்த்தைகளை சொல்லிப் பழகுங்கள்.
🔸அந்த வாா்த்தைகள், உண்மையிலேயே உங்க வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.
🔸பிரபஞ்ச நியதிப்படி ஒரு மனிதன் தன் விருப்பத்திற்கு ஏற்ப,
வீடு,
வாகனம்,
தொழில்,
நண்பர்கள்
போன்றவற்றை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
🔸தான் விரும்புவது போல் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆனால்
தாய்- தந்தை,
முன்னோர்கள் ,
உடன்பிறந்தவர்கள்,
நமக்கு பிறக்கும் பிள்ளைகள்,
உற்றார் – உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை,
🔸 இந்த பிரபஞ்சம் யாருக்கும் வழங்குவதில்லை.
🔸எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும்
இந்த பூர்வ ஜென்ம பந்த,
ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது.
“உறவுகளே வேண்டாம்”
🔸என்று ஒதுங்கி நின்றாலும்,
நம் முன்னோர்கள் மற்றும் தாய்,
தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும்.
🔸எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்.
🔴 தந்தையால் மகனுக்கு பயனற்ற நிலை
9-ம் அதிபதி,
9-ல் நின்ற கிரகம்
வக்ரம்,
நீச்சம்,
அஸ்தமனம்
பெற்று இருந்தால்
அல்லது
9-ல்
சனி,
ராகு-கேது
இருந்தால் தந்தை – மகன் ஒற்றுமை இருக்காது.
*
9-ம் அதிபதி
6, 8, 12-ல்
மறைந்திருந்தால்,
அந்த நபருக்கு தந்தையால் பயன் ஒன்றும் கிடைக்காது.
*
9-ல் சூரியன் இருந்தாலோ,
சூரியன் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ
தந்தையின் ஆதரவு கிடைக்காது.
*
♦️ 9-ம் அதிபதி
6-ல் இருந்தால்,
பூர்வீகச் சொத்துக்களால் கடன்,
பூர்வீகச் சொத்து இழப்பு,
எதிரி தொல்லை,
புகழுக்கு களங்கம்,
முன்னேற்ற குறைவு போன்ற காரணங்களால்,
தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவும்.
*
9-ம் அதிபதியானவர்
8, 12-ல்
இருந்தால்,
அதிர்ஷ்ட குறைவு,
அதிகச் செலவு,
ஏழ்மை,
பூர்வீக சொத்து பறிபோதல் போன்ற காரணங்களால்
தந்தையின் அன்பும்,
அரவணைப்பும் கிடைக்காது.
*
⚜️ சனி, ராகு- கேது
அல்லது
⚜️*மாந்தியால்*
♦️ சூரியனுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தந்தையால் பயன் இருக்காது.
*
♦️ 9-ம் இடத்தில்
சந்திரன் – சனி
சேர்க்கை
அல்லது
சந்திரன் சனியின்
பார்வை இருந்தால்,
அந்த ஜாதகர் தந்தையால்
பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
♦️ 9-ல்
தனித்த சனி
அல்லது
சூாியன் – சனி
சம்பந்தம் இருந்தாலும்,
அந்த ஜாதகருக்கு தந்தையின் பாசம் கிடைக்காது.
மகனால் தந்தைக்கு மன வருத்தம்
♦️ 5-ம் இடம்
அல்லது
5-ம் அதிபதிக்கு
செவ்வாய்,
சனி
பார்வை அவ்வளவு நல்லதல்ல.
*
♦️ 5-ம் அதிபதி,
5-ல் நின்ற கிரகம்
நீச்சம்,
பகை,
அஸ்தமனம்
வக்ரம்
அடைந்தாலும்,
5-ல்
ராகு ,
கேது,
சனி
போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும்,
வாரிசுகளால் மனவருத்தம் உண்டாகும்.
♦️ 5-ம் இடம்
அல்லது
5-ம் அதிபதிக்கு
6, 8, 12 போன்ற மறைவு ஸ்தான சம்பந்தம் இருந்தால்,
பெற்றோர்களை பிரிந்து வாரிசுகள் வெளியூர்,
வெளிநாடு,
வெளிமாநிலத்தில் வாழும் நிலையை ஏற்படுத்தும்.
⚜️ பரிகாரம்
🟡. வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள்,
சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள்,
சூரிய ஓரை நேரத்தில் சிவ வழிபாடு செய்து,
எள் சாதம் தானம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
🟡. தந்தையால் மன விரக்தி கொண்டவர்கள் ,
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வரும் சனி ஓரையில்
சிவ வழிபாடு செய்து வர வேண்டும்.
அத்துடன் சிவன் கோவில் கருவறையில் எரியும் தீபத்திற்கு
நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்தால்
விரைவில் மாற்றம் உண்டாகும்.
நல்ல பதிவு