Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

தந்தை-மகன் உறவுக்கான கிரக அமைப்பு

தந்தை-மகன் உறவுக்கான கிரக அமைப்பு

 

 

♈ ஒரு மனிதன் பூமியில் பிறந்து வாழும் காலத்தில், சாதனை மனிதனாக வாழ வேண்டும்.

♈ அதாவது எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும்.

♈ இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. இதைத்தான்

⚜️ திருவள்ளுவர் ⚜️

,🪭 *“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”*🪭

என்று எடுத்துரைக்கிறார்

🟡 தந்தை-மகன் உறவுக்கான கிரக அமைப்பு

🔸ஒருவர் புகழுடன் வாழ வேண்டும் என்றால்,

1, 5, 9 என்னும் பூர்வ ஜென்ம தொடர்புடைய பாவகங்களில்

9 -ம் பாவகம் மிக முக்கியம்.

🔸 தந்தை என்ற 9-ம் பாவகம் இருந்தால் தான்,

🔸 1-ம் பாவகம் என்ற ஜாதகர் ஜனனமாக முடியும் .

⚜️1-ம் பாவகம் என்ற லக்ன பாவகம் சிறப்பாக இருந்தால்தான்

🔸, 9-ம் பாவகம்

என்ற பூர்வ புண்ணிய பலத்தால்,

5-ம் பாவகம் என்ற குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🔸 எனவே ஒரு ஜாதகரை வலிமை பெறச் செய்யும் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ஆகியவற்றில்

🔸 9-ம் பாவகமானது வலிமையுடன் இருக்க வேண்டும்.

♦️ உன்னைப் பெற்ற தந்தை யார்?, ❓

♦️ உன் உடம்பில் உள்ள டி.என்.ஏ.வை யாரிடம் இருந்து நீ பெற்றாய் ?, ❓

♦️ உன் குலம் – கோத்திரம் என்ன?, ❓

♦️ பெற்றவர்கள் செய்த புண்ணிய பலத்தால் நீ பிறந்தாயா? ❓

⚜️ அல்லது ❗

♦️ பெற்றவர்களின் பாவத்தை தீர்க்கப் பிறந்தாயா?, ❓

♦️ உன்னால் உன் தந்தை புகழப்படுவாரா? ❓

⚜️ அல்லது ❗

♦️ உன் தந்தையால் உனக்கு புகழ் கிடைக்கப் போகிறாதா?, ❓

♦️ முன்னோர்களின் சொத்துக்கள் உழைப்பால் வந்ததா? ❓

⚜️ அல்லது❗

♦️ அநீதியாக வந்ததா?,

♦️ நீ முன்னோர்களின் சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவனா?,

♦️ உன் பிறப்பின் நோக்கம் என்ன? ❓

♻️போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தருவதுதான் 9-ம் பாவகம்.

♻️மொத்தத்தத்தில் இந்த ஜென்மத்தில் உனக்கு என்ன கொடுப்பினை உள்ளது.

♻️நீ அனுபவிக்கப் போகும் நல்ல,

தீய வினைப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி இதன் மூலம் அறிய முடியும்.

🟡ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் கருவில் சுமக்கிறாள்.

🟡 தந்தை என்பவரோ, தன் வாரிசுக்கு முன் மாதிரியாக வாழ்பவர் .

🔸அவர்கள் சொல்லும் முன்பாகவே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்.

🔸வாழ்நாள் முழுவதும் பிள்ளையை தன் நெஞ்சில் சுமந்து,

சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக மாற்றும் பொறுப்பு கொண்டவர்.

🔸இது ஒருபுறம் இருக்க பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளைப் போல வாழ்கிறார்கள்.

🔸பல இடங்களில் இன்னும் ஒரு படி மேலே போய்

தந்தையும், மகனும் பேசிக் கொள்வதே கிடையாது.

அல்லது❗

🔹கடும் பகைவர்களாக இருக்கிறார்கள்.

🔹 தந்தை- மகன் உறவை மூன்றாக வகைப்படுத்தலாம் .

🔹இதில் முதலாவது, தந்தையும் மகனும் ஒருமித்த கருத்துடன் வாழ்வது.

🔹இவர்களுடைய ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும்.

🔹இல்லையெனில் 9-ம் இடத்திற்கு லக்ன சுபர்

அல்லது

குருவின் பார்வை இருக்கும்.

🔹தா்ம கா்மாதிபதி யோகம் வரமாக செயல்படும்.

🔹இவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துடன் வாழ்வார்கள்.

🔹தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது

♈ இரண்டாவது வகை.

♦️இவர்களுடைய ஜாதகத்திலும் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும்.

♦️அந்த யோகமானது இவர்களுக்கு சாபமாக செயல்படும்.

♦️ இவா்கள் ஜாதகத்தில் குரு, சனி வக்ரமாகவோ, பலம் இழந்தோ இருக்கும் .

♦️ குரு அல்லது சனிக்கு, செவ்வாய் சம்பந்தம் இருக்கும்.

♦️தந்தை மகன் கருத்துவேறுபாடு

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்

மன வருத்தத்தை தரும் விதத்தில் இருப்பது

மூன்றாவது வகையாகும்.

♦️ இதனை தந்தையால் மகனுக்கு பாதிப்பு

♦️ அல்லது❗

☣️மகனால் தந்தைக்கு மன வேததனை என்றும் வகைப்படுத்தலாம்.

☣️ஜனன கால ஜாதகத்தில் கிரக நிலவரம் எப்படி இருந்தாலும்,

தந்தை – மகன் கருத்து ஒற்றுமை என்பது மிக அவசியம்.

♦️ இதற்கு தீர்வு கிடைக்குமா? ❓

♦️ உண்டா? ❓

☣️என்பதே பலரின் ஆதங்கம். இதை ஜாதக ரீதியாக மட்டுமின்றி,

உளவியல் ரீதியாகவும் கொஞ்சம் அணுகவேண்டியதிருக்கிறது.

☣️உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்குமான தீா்வும்,

நம் கையில்தான் இருக்கிறது.

☮️ ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை

☮️, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது,

☮️ சகிப்புத் தன்மை இன்மை

☮️போன்றவை கருத்து வேறுபாட்டிற்கு பிரதான காரணமாக இருக்கின்றன.

☮️நமது ஆழ்மனதில் நிலவும் மனக்குறையும் கூட பல பிரச்சினைக்கு மூலக் காரணமாக உள்ளது.

ஆஸ்ட்ரோ வாசுதேவன்.

உதாரணமாக ❗

❇️ யாராவது உங்களை பார்த்து “அப்பா சவுக்கியமா?” ❓

ன்னு கேட்டா, நீங்க என்ன பதில்களை சொல்றீங்க.. ❗

❇️ “ஏதோ இருக்கிறார்”, ❗

❇️ “என்னமோ வண்டி ஓடுது”, ❗

❇️*“ என்னத்த சொல்ல..❗

 

❇️ எல்லாம் என் தலையெழுத்து”,❗

❇️ “ஏண்டா அவருக்கு பிள்ளையா பிறந்தோம்னு இருக்கு”, ❗

❇️ “எனக்கு மட்டும் நல்ல அப்பாவை தராமல் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு”❗

♦️பலரிடம் இருந்து விரக்தியின் வெளிப்பாடாக இப்படியானவ பதில்கள்தான் பெரும்பாலும் வருகிறது.

♦️இதெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வருகிற வார்த்தைகள்.

♦️இந்த வார்த்தைகள்தான் உங்களோட வாழ்க்கைைய தீர்மானம் பண்ணுகிறது.

ஏனெனில்,

ஒரு வார்த்தைைய பத்து தடவை சொல்லும் போது,

அந்த வார்த்தைக்கு சக்தி கிடைத்து,

அது உடனடியாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

உங்க சொல்படிதான் அனைத்தும் நடக்கும்.

எனவே

⚜️ “நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்”,

⚜️ “கடவுள் எங்களை நல்லபடியா வைத்து இருக்கிறார்”

🔸என்பது போன்ற நேர்மறை வார்த்தைகளை சொல்லிப் பழகுங்கள்.

🔸அந்த வாா்த்தைகள், உண்மையிலேயே உங்க வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.

🔸பிரபஞ்ச நியதிப்படி ஒரு மனிதன் தன் விருப்பத்திற்கு ஏற்ப,

வீடு,

வாகனம்,

தொழில்,

நண்பர்கள்

போன்றவற்றை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

🔸தான் விரும்புவது போல் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆனால்

தாய்- தந்தை,

முன்னோர்கள் ,

உடன்பிறந்தவர்கள்,

நமக்கு பிறக்கும் பிள்ளைகள்,

உற்றார் – உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை,

🔸 இந்த பிரபஞ்சம் யாருக்கும் வழங்குவதில்லை.

🔸எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும்

இந்த பூர்வ ஜென்ம பந்த,

ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது.

“உறவுகளே வேண்டாம்”

🔸என்று ஒதுங்கி நின்றாலும்,

நம் முன்னோர்கள் மற்றும் தாய்,

தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும்.

🔸எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.

ஆஸ்ட்ரோ வாசுதேவன்.

🔴 தந்தையால் மகனுக்கு பயனற்ற நிலை

9-ம் அதிபதி,

9-ல் நின்ற கிரகம்

வக்ரம்,

நீச்சம்,

அஸ்தமனம்

பெற்று இருந்தால்

அல்லது

9-ல்

சனி,

ராகு-கேது

இருந்தால் தந்தை – மகன் ஒற்றுமை இருக்காது.

*

9-ம் அதிபதி

6, 8, 12-ல்

மறைந்திருந்தால்,

அந்த நபருக்கு தந்தையால் பயன் ஒன்றும் கிடைக்காது.

*

9-ல் சூரியன் இருந்தாலோ,

சூரியன் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ

தந்தையின் ஆதரவு கிடைக்காது.

*

♦️ 9-ம் அதிபதி

6-ல் இருந்தால்,

பூர்வீகச் சொத்துக்களால் கடன்,

பூர்வீகச் சொத்து இழப்பு,

எதிரி தொல்லை,

புகழுக்கு களங்கம்,

முன்னேற்ற குறைவு போன்ற காரணங்களால்,

தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவும்.

*

9-ம் அதிபதியானவர்

8, 12-ல்

இருந்தால்,

அதிர்ஷ்ட குறைவு,

அதிகச் செலவு,

ஏழ்மை,

பூர்வீக சொத்து பறிபோதல் போன்ற காரணங்களால்

தந்தையின் அன்பும்,

அரவணைப்பும் கிடைக்காது.

*

⚜️ சனி, ராகு- கேது

அல்லது

⚜️*மாந்தியால்*

♦️ சூரியனுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தந்தையால் பயன் இருக்காது.

*

♦️ 9-ம் இடத்தில்

சந்திரன் – சனி

சேர்க்கை

அல்லது

சந்திரன் சனியின்

பார்வை இருந்தால்,

அந்த ஜாதகர் தந்தையால்

பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

♦️ 9-ல்

தனித்த சனி

அல்லது

சூாியன் – சனி

சம்பந்தம் இருந்தாலும்,

அந்த ஜாதகருக்கு தந்தையின் பாசம் கிடைக்காது.

மகனால் தந்தைக்கு மன வருத்தம்

♦️ 5-ம் இடம்

அல்லது

5-ம் அதிபதிக்கு

செவ்வாய்,

சனி

பார்வை அவ்வளவு நல்லதல்ல.

*

♦️ 5-ம் அதிபதி,

5-ல் நின்ற கிரகம்

நீச்சம்,

பகை,

அஸ்தமனம்

வக்ரம்

அடைந்தாலும்,

5-ல்

ராகு ,

கேது,

சனி

போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும்,

வாரிசுகளால் மனவருத்தம் உண்டாகும்.

♦️ 5-ம் இடம்

அல்லது

5-ம் அதிபதிக்கு

6, 8, 12 போன்ற மறைவு ஸ்தான சம்பந்தம் இருந்தால்,

பெற்றோர்களை பிரிந்து வாரிசுகள் வெளியூர்,

வெளிநாடு,

வெளிமாநிலத்தில் வாழும் நிலையை ஏற்படுத்தும்.

⚜️ பரிகாரம்

🟡. வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள்,

சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள்,

சூரிய ஓரை நேரத்தில் சிவ வழிபாடு செய்து,

எள் சாதம் தானம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

🟡. தந்தையால் மன விரக்தி கொண்டவர்கள் ,

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வரும் சனி ஓரையில்

சிவ வழிபாடு செய்து வர வேண்டும்.

அத்துடன் சிவன் கோவில் கருவறையில் எரியும் தீபத்திற்கு

நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்தால்

விரைவில் மாற்றம் உண்டாகும்.

1 thought on “தந்தை-மகன் உறவுக்கான கிரக அமைப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *